"வளர்ப்பு யானையான அரிசி ராஜா விரைவில் கும்கியாக மாறும்" - வனத்துறை அதிகாரிகள்

அரிசிராஜா யானையானது விரைவில் கும்கியாக மாறும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வளர்ப்பு யானையான அரிசி ராஜா விரைவில் கும்கியாக மாறும் - வனத்துறை அதிகாரிகள்
x
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே 4 பேரை கொன்ற அரிசிராஜா யானை கடந்த 13 ஆம் தேதி பிடிக்கப்பட்டு வரகளியாறு முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டது. மரக்கூண்டில் அடைக்கப்பட்ட அரிசிராஜா, முதல் 2 நாட்கள் பிடிவாதம் பிடித்தாலும் கூட பின்னர் பாகன்களுடன் சகஜமாக பழகியுள்ளது. யாருக்கும் தொந்தரவில்லாமல் இருக்கும் இந்த யானையானது தற்போது வளர்ப்பு யானையாக உள்ள நிலையில் விரைவில் கும்கியாக மாறும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்