"ராபர்ட் பயஸுக்கு ஒரு மாதம் பரோல்" : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ராபர்ட் பயஸுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மகன் தமிழ்கோ-வின் திருமண ஏற்பாடுகளை கவனிக்க 30 நாட்கள் பரோல் கேட்டு, ராபர்ட் பயஸ் சிறைதுறையிடம் மனு அளித்தார். அந்த மனு பரிசீலிக்கப்படாததால், ஒரு மாதம் பரோல் கோரி ராபர்ட் பயஸ் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ், டீக்காராமன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ராபர்ட் பயஸுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கி உத்தரவிட்ட நீதிபதிகள், பத்திரிகையாளர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் அமைப்பினரை சந்திக்க கூடாது என நிபந்தனை விதித்துள்ளனர்.
Next Story