சென்னை : இருசக்கர வாகனம் மீது மோதிய குப்பை லாரி - தலைமை காவலர் உடல் நசுங்கி பலி

சென்னையில் இரு சக்கர வாகனம் மீது குப்பை லாரி மோதிய விபத்தில் தலைமை காவலர் உடல் நசுங்கி பலியானார்.
சென்னை : இருசக்கர வாகனம் மீது மோதிய குப்பை லாரி - தலைமை காவலர் உடல் நசுங்கி பலி
x
சென்னையில் இரு சக்கர வாகனம் மீது  குப்பை லாரி மோதிய விபத்தில் தலைமை காவலர் உடல் நசுங்கி பலியானார். சென்னை மகாகவி பாரதியார் நகர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்த பழனிக்குமார், மதுரை மாவட்டத்தை பூர்விகமாகக் கொண்டவர். பணி முடித்து இருசக்கர வாகனத்தில் மவுண்ட் காவலர் குடியிருப்பில் உள்ள தனது வீட்டுக்கு அவர் திரும்பி கொண்டிருந்தார். அப்போது மகாகவி பாரதி நகர் பணிமனை அருகே சாலையின் நடுவே உள்ள பள்ளத்தில் நிலைதடுமாறி விழுந்துள்ளார். கண்ணிமைக்கும் நேரத்தில், அந்த வழியாக வந்த மாநகராட்சி குப்பை லாரி ஏறியதில் பழனிகுமார் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். லாரி ஓட்டுநரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்