அரசுக்கு எதிராக,பொன்.மாணிக்கவேல் தொடர்ந்த வழக்கு : வரும் 25 ம் தேதிக்கு ஒத்திவைப்பு

தமிழக அரசுக்கு எதிராக, பொன்.மாணிக்கவேல் தொடர்ந்த அவதூறு வழக்கை, வரும் 25 ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசுக்கு எதிராக,பொன்.மாணிக்கவேல் தொடர்ந்த வழக்கு : வரும் 25 ம் தேதிக்கு ஒத்திவைப்பு
x
சிலை கடத்தல் வழக்குகளில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி, பொன்.மாணிக்கவேல்,  தமிழக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு  நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிலை கடத்தல் வழக்கில்உச்ச நீதிமன்ற உத்தரவை  பின்பற்றவில்லை என தமிழக அரசுத் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.டி.ஜி.பி  நடத்தும் கூட்டங்கள் எதிலும் பொன். மாணிக்கவேல் கலந்து கொள்வதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.இதை தொடர்ந்து பொன் மாணிக்கவேலுக்கு செய்து கொடுத்த வசதிகள் குறித்து தமிழக அரசும், இதுவரை விசாரித்த வழக்கு விபரங்கள் குறித்து பொன் மாணிக்கவேல் தரப்பும் எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள்,  விசாரணையை வரும் 25 ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்