குடிபோதையில் தந்தையை அடித்துக் கொன்ற மகன் - கைது செய்தது காவல்துறை

சென்னையில் குடிபோதையில் தந்தையை அடித்துக் கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.
குடிபோதையில் தந்தையை அடித்துக் கொன்ற மகன் - கைது செய்தது காவல்துறை
x
சென்னையில் குடிபோதையில் தந்தையை அடித்துக் கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.நெற்குன்றம் புவனேஷ்வரி நகர் பகுதியை சேர்ந்த  கட்டிட மேஸ்திரி பாலாஜி, மது அருந்திவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது பாலாஜிக்கும், அவரது 80 வயதான தந்தைக்கு தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் பாலாஜி தாக்கியதில், தந்தை முத்து மயங்கி விழுந்தார். இதனையடுத்து, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முத்து, சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இதனையடுத்து, கீழ்ப்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தந்தையை தாக்கிய மகன் பாலாஜியை கைது செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்