காவிரி ஒழுங்காற்று குழு ஆலோசனைக் கூட்டம் : 4 மாநில பொதுப்பணித்துறை உயரதிகாரிகள் பங்கேற்பு

காவிரி ஒழுங்காற்று குழுவின் 20 வது ஆலோசனை கூட்டத்தில் 4 மாநிலங்களைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
காவிரி ஒழுங்காற்று குழு ஆலோசனைக் கூட்டம் : 4 மாநில பொதுப்பணித்துறை உயரதிகாரிகள் பங்கேற்பு
x
காவிரி ஒழுங்காற்று குழுவின் 20 வது ஆலோசனை கூட்டத்தில் 4 மாநிலங்களைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தின், சேவா பவனில் காவிரி ஒழுங்காற்று குழுவின் 20-வது ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. குழுவின் தலைவர் நவீன் குமார் தலைமையில் நடைபெற்று வரும் கூட்டத்தில், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களைச் சேர்ந்த பொதுப்பணித்துறை உயரதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். இந்த கூட்டத்தில் 4 மாநில அதிகாரிகளும் காவிரி நீர் தொடர்பான தங்களது தரப்பு தகவல்களை எழுத்து பூர்வமாக தாக்கல் செய்கின்றனர்.  குழுவின் முந்தைய கூட்டம், திருச்சியில் நடைபெற்ற நிலையில், 20 வது கூட்டம் டெல்லியில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்