மதுரை ஸ்மார்ட் சிட்டி பணிகள் : வைகை ஆற்றங்கரையில் இருந்து ஆக்கிரமிப்புகள் அகற்றம்

மதுரை ஸ்மார்ட் சிட்டி பணியின் கீழ் வைகை ஆற்றங்கரையிலிருந்த ஆக்கிரமிப்பு வீடுகள் மற்றும் கடைகளை போலீசார் பாதுகாப்புடன் மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.
மதுரை ஸ்மார்ட் சிட்டி பணிகள் : வைகை ஆற்றங்கரையில் இருந்து ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x
மதுரை ஸ்மார்ட் சிட்டி பணியின் கீழ் வைகை ஆற்றங்கரையிலிருந்த ஆக்கிரமிப்பு வீடுகள் மற்றும் கடைகளை போலீசார் பாதுகாப்புடன் மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், வைகை ஆற்றங்கரையின் இருபுறமும் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளது. இந்நிலையில், மதுரை ராஜா மில்ரோடு முதல் குருவிக்காரன் சாலை வரை 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஏராளமான கடைகள், வீடுகள் ஆக்கிரமிப்பில் உள்ளன. இதை காலி செய்ய கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக முறையாக மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால் காலி செய்யாமல் இருந்ததால், இன்று மாநகராட்சி அதிகாரிகள் போலீசார் பாதுகாப்புடன் அவற்றை அகற்றினர்.  

Next Story

மேலும் செய்திகள்