தமிழக நகரங்களுக்கு குறைந்த கட்டண விமான சேவை நிறுத்தம்

சென்னையில் இருந்து கோவை, திருச்சி, மதுரை நகரங்களுக்கு குறைந்த கட்டணத்தில் இயக்கப்பட்ட ஏர்- அலைன்ஸ் விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
தமிழக நகரங்களுக்கு குறைந்த கட்டண விமான சேவை நிறுத்தம்
x
சென்னையில் இருந்து கோவை, திருச்சி, மதுரை நகரங்களுக்கு குறைந்த கட்டணத்தில் இயக்கப்பட்ட ஏர்- அலைன்ஸ் விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. சென்னையில் இருந்து  ஏர்-இந்தியாவின் அலைன்ஸ் விமானம் திருச்சி, மதுரை, கோவை நகரங்களுக்கு  இருந்து குறைந்த கட்டணத்தில் கடந்த 2 ஆண்டுகளாக இயக்கப்பட்டு வந்தன. தினசரி 12 முறை இயக்கப்பட்ட இந்த விமான சேவைகள் வரும் 30 ஆம் தேதி வரை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கூறிய அதிகாரிகள், போதிய பயணிகள் இல்லாததால் பாதிப்பு ஏற்படுவதால், இந்த நகரங்களுக்கு இயக்கப்பட்ட 2 விமானங்கள் வேறு நகரங்களுக்கு திருப்பி விடப்படுவதாக கூறினர். இந்த நடவடிக்கை தற்காலிமானது என்றும், சென்னையில் இருந்து வாரந்தோறும் 3 நாட்கள் இலங்கை யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை தொடரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்