சென்னை ஐஐடி மாணவி மர்ம மரணம் : குற்றவாளிகளை கைது செய்ய ஸ்டாலின் வலியுறுத்தல்
சென்னை ஐஐடி மாணவி மரணத்தில் மர்மங்கள் இருப்பதை அவரின் பெற்றோர் எழுப்பும் கேள்விகள் உணர்த்துவதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை ஐஐடி மாணவி மரணத்தில் மர்மங்கள் இருப்பதை அவரின் பெற்றோர் எழுப்பும் கேள்விகள் உணர்த்துவதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள சமூகவலைதள பதிவில், பாத்திமா பெற்றோரின் கண்ணீருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்வதன் மூலமாக நியாயத்தின் பக்கம் நிற்பதை தமிழக அரசு நிரூபிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இதுபோன்ற நிகழ்வுகள் திராவிட இயக்கம் எப்போதும் தேவை என்பதை தொடர்ந்து உணர்த்துவதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
Next Story