"தமிழக காவல்துறை நடவடிக்கையை கேரள காவல்துறை பின்தொடர்கிறது"

பாத்திமா மரணம் தொடர்பாக தமிழக காவல் துறையின் நடவடிக்கையை கேரள காவல் துறை பின்தொடர்வதாக, அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
தமிழக காவல்துறை நடவடிக்கையை கேரள காவல்துறை பின்தொடர்கிறது
x
பாத்திமா மரணம் தொடர்பாக தமிழக காவல் துறையின் நடவடிக்கையை கேரள காவல் துறை பின்தொடர்வதாக, அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முகநூலில் பதிவிட்டுள்ள அவர், பாத்திமாவின் பெற்றோர் வேண்டுகோளை தொடர்ந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேரள காவல் துறை அதிகாரிகளுக்கு தாம் உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். கேரள காவல் துறை சார்பில் தமிழக காவல் துறைக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 
இது குறித்து தமிழக டிஜிபியை கேரள அதிகாரிகள் தொடர்பு கொண்ட போது, மாநகர குற்றப்பிரிவு வழக்கை விசாரித்து வருவது தெரியவந்ததாகவும் கூறியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்