சீன அதிபர் வருகைக்கு பேனர் வைக்கும் அனுமதியை எதிர்த்த மனு தள்ளுபடி

பேனர் வைப்பதற்கு எதிராக டிராபிக் ராமசாமி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
சீன அதிபர் வருகைக்கு பேனர் வைக்கும் அனுமதியை எதிர்த்த மனு தள்ளுபடி
x
பேனர் வைப்பதற்கு எதிராக டிராபிக் ராமசாமி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. சென்னையில், அதிமுக பிரமுகர் வைத்திருந்த பேனர் சரிந்து, இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து பேனர் வைக்க, தடை விதிக்கப்பட்டது. எனினும், சீன அதிபர் வருகையை ஒட்டி, அவரை வரவேற்று பேனர் வைக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதை எதிர்த்து, சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தொடர்ந்தார். மனுவை விசாரித்த நீதிபதி பாலி நாரிமன் அமர்வு, சீன அதிபர் வந்தார், சென்றார் என்றும், எனவே, தற்போது மனுவில் கேட்க ஒன்றுமில்லை என்றும் கூறி தள்ளுபடி செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்