ரயில்வே ஒப்பந்தத்தில் முறைகேடு : ரயில்வே மேலாளர் உட்பட 3 பேருக்கு சிறை

திருச்சி ரயில்வே கோட்டத்தில் ஒப்பந்த புள்ளி முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி ரயில்வே மேலாளர் உட்பட 3 பேருக்கு சிறைதண்டனை வழங்கப்பட்டது.
ரயில்வே ஒப்பந்தத்தில்  முறைகேடு : ரயில்வே மேலாளர் உட்பட 3 பேருக்கு சிறை
x
திருச்சி ரயில்வே கோட்டத்தில் வணிக பிரிவில் மேலாளராக பணியாற்றி வரும் முத்துராமலிங்கம் மற்றும் சீனிவாசன், இன்பராஜ் மூன்று பேரும் ஒப்பந்த புள்ளி முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை  நடத்தி வந்தது. இந்த நிலையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து முத்துராமலிங்கம் மற்றும் சீனிவாசனுக்கு  தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் 25 ஆயிரம் அபதாரமும் ஒப்பந்தத்தில் முறைகேட்டில் மூளையாக செயல்பட்ட வணிகத் துறையின் உதவியாளர் இன்பராஜ்க்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் 50 ஆயிரம் ரூபாய் அபதாரம் விதித்து மதுரை சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது.


Next Story

மேலும் செய்திகள்