பிரபல நகைக்கடையில் ரூ.1 கோடி கேட்டு மிரட்டிய கும்பல் : 5 வழக்கறிஞர் உட்பட 9 பேர் கைது

சென்னையில், பிரபல நகைக்கடை மேலாளரை மிரட்டி ஒரு கோடி ரூபாய் கேட்ட அதிமுக உறுப்பினர் மற்றும் 5 வழக்கறிஞர் உட்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
பிரபல நகைக்கடையில் ரூ.1 கோடி கேட்டு மிரட்டிய கும்பல் : 5 வழக்கறிஞர் உட்பட 9 பேர் கைது
x
திருவேற்காடு சுந்தரா சோழபுரம் ஏழுமலை நகரை சேர்ந்தவர் தனசேகரன். இவர்  கடந்த 3 ஆம் தேதி, தியாகராயநகரில் உள்ள பிரபல எலைட் தங்க நகைக்கடையில் பழைய தங்க நாணயங்கள் கொடுத்து ,3 சவரன் செயின் வாங்கியுள்ளார். பின்னர், திரும்பி வந்த அவர், அந்த தங்க நகை போலியானது என கூறி கடை ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்து மிரட்டி 15 லட்ச ரூபாய் பெற்றுள்ளார். அதன் பின்னர் மீண்டும் சில நாட்களில், 15 க்கும் மேற்பட்ட நபர்களுடன் சென்ற தனசேகர், கடை மேலாளரிடம்  தகராறு செய்து ஒரு கோடி ரூபாய்  கேட்டு மிரட்டியுள்ளார். இதையடுத்து நகைக் கடை மேலாளர் அளித்த புகாரின் பேரில்,  தனசேகர் மற்றும் அவருடனிருந்த வடபழனியை சேர்ந்த  அதிமுக உறுப்பினர் ஜீவா உள்ளிட்ட  9 பேரை போலீசார் கைது செய்தனர் . இவர்களிடமிருந்து போலியான காவல்துறை அடையாள அட்டை,  ஏர்கன் துப்பாக்கி மற்றும்  இரண்டு கார்களையும் போலீசார், பறிமுதல் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்