உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறும் சிறுவன் : பள்ளியில் போட்ட தடுப்பூசி காரணமா?
பள்ளியில் போட்ட தடுப்பூசியால் தங்களின் மகன் உயிருக்கு போராடும் நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
பள்ளியில் போட்ட தடுப்பூசியால் தங்களின் மகன் உயிருக்கு போராடும் நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் அங்குசெட்டிப்பாளையத்தை சேர்ந்த சத்யகுமார் - தனம் தம்பதியரின் மகன் பவன்சங்கர். 5 வயதான இவர், தட்டான்சாவடியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார். கடந்த ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி சிறுவனுக்கு பள்ளியில் தொண்டை வீங்கி தடுப்பூசி போட்டதாக கூறப்படுகிறது. ஆனால் ஊசி போட்டதற்கு பிறகு சிறுவனுக்கு வலிப்பு மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் சிறுவன் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தங்கள் மகனுக்கு போடப்பட்ட தடுப்பூசியால் தான் பிரச்சினை ஏற்பட்டதாகவும், எனவே உரிய நடவடிக்கை எடுக்க கோரி பெற்றோர் மற்றும் உறவினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
Next Story