தண்ணீர் தொட்டி மீது அமர்ந்து மது அருந்திய போது விபரீதம் : தொட்டிக்குள் விழுந்தவர் சடலமாக மீட்பு
மானாமதுரையில் தண்ணீர் தொட்டி மீது அமர்ந்து மது அருந்திய போது தொட்டிக்குள் விழுந்தவர் உயிரிழப்பு.
மானாமதுரை திட்ட அலுவலராக பணிபுரிந்து வந்த ஜெரோம் என்பவர், பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தரை மட்ட நீர்த்தேக்க தொட்டி மீது அமர்ந்து மது அருந்தியுள்ளார். திடீரென அவரை காணவில்லை என சிப்காட் ஊழியர்கள் புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர், தொட்டியின் அடியில் தண்ணீருக்குள் சடலமாக கிடந்த ஜெரோமை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
Next Story