மத்திய சென்னை தொகுதி எம்.பி. அலுவலகம் திறப்பு விழா
சமூக வலைத்தளங்கள் மூலம் தயாநிதி மாறன் குறை கேட்பு
சென்னை நுங்கம்பாக்கத்தில், மத்திய சென்னை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறனின் தொகுதி அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. கருணாநிதி படத்துக்கு மலர் தூவி, மரக்கன்று நட்டு வைத்து பின்பு அலுவலகத்தை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தயாநிதி மாறன் , தொகுதிமக்களின் குறைகள் பேஸ்புக் , ட்விட்டர் , வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் கேட்டு அறியப்பட்டு, தீர்த்து வைக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
Next Story