கோபி சுற்றுவட்டார கிராமங்களில் கனமழை : குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதி
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை முதல் சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை முதல் சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது. வேதபாறை ஓடையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பகவதி நகர், வளையபாளையம், கணக்கம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தரைப்பாலங்கள் நீரில் மூழ்கியதால், சத்தியமங்கலம் - அந்தியூா் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கணக்கம்பாளையம் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம், அரசுப்பள்ளி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்ததால் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகினர். இதனையடுத்து வருவாய் துறையினர் விரைந்து வந்து வெள்ளநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Next Story