தேசிய கராத்தே போட்டி - 16 மாநிலங்கள் பங்கேற்பு : முதலிடம் பிடித்து அசத்திய தமிழக அணி
சேலத்தில் தேசிய அளவிலான கராத்தே போட்டிகள் நடைபெற்றன.
சேலத்தில் தேசிய அளவிலான கராத்தே போட்டிகள் நடைபெற்றன. சேலம் எடப்பாடி அருகே 2 நாட்களாக நடந்த இந்த போட்டியில், கொல்கத்தா, பீகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட 16 மாநிலங்களை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் தமிழகத்தை சேர்ந்த வீரர் வீராங்கனைகள் அதிக பரிசுகளை தட்டி சென்று, முதலிடம் பிடித்து அசத்தினர். கேரள மாநிலம் இரண்டாம் இடமும், கர்நாடகா மூன்றாம் இடமும் பிடித்தது.
Next Story