உலகளாவிய கண்டுபிடிப்பு பரிமாற்ற உச்சி மாநாடு : இலங்கை கல்வியாளர்கள் 20 பேர் வருகை
உலகளாவிய கண்டுபிடிப்பு பரிமாற்ற உச்சி மாநாடு சென்னை பள்ளிக்கரணையில் உள்ள சான் அகாடமி பள்ளியில் நடைபெற்றது.
உலகளாவிய கண்டுபிடிப்பு பரிமாற்ற உச்சி மாநாடு சென்னை பள்ளிக்கரணையில் உள்ள சான் அகாடமி பள்ளியில் நடைபெற்றது. இதில் பங்கேற்க இலங்கை கல்வியாளர்கள் 20 பேர் சான் அகாடமி பள்ளிக்கு வருகை தந்திருந்தனர். அவர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்களிடம் பள்ளியின் செயல்பாடுகள், மேம்படுத்தல் திறன் குறித்து கேட்டறிந்தனர். பின்னர் செய்தியாளரிடம் பேசிய அப்பள்ளி குழுமத்தின் நிர்வாக இயக்குநர் அர்ச்சனா, நாளைய குடிமகன்களுக்கு உலக அளவில் சிறப்பானவற்றை மாணவர்களுக்கு சேர்க்கும் பொறுப்பு கல்வியாளர்களுக்கு இருப்பதால் இதுபோன்ற முயற்சிகளில் ஈடுபடுவதாகத் தெரிவித்தார்.
Next Story