"திருச்சி கூட்டுறவு வங்கியில் ரூ.1.50 கோடி கொள்ளை" - சிசிடிவி-யில் பதிவான காட்சிகள் வெளியீடு

திருச்சியில் பெல் கூட்டுறவு வங்கியில் ஒன்றரை கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி கூட்டுறவு வங்கியில் ரூ.1.50 கோடி கொள்ளை - சிசிடிவி-யில் பதிவான காட்சிகள் வெளியீடு
x
திருச்சியில் பெல் கூட்டுறவு வங்கியில் ஒன்றரை கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த வியாழக் கிழமை, சம்பளம் வழங்குவதற்காக எடுத்து வரப்பட்ட ஒன்றரை கோடி ரூபாயை வங்கிக்குள் வைத்து பூட்டி உள்ளனர். பணத்தை லாக்கரில் வைக்காமல் சென்றது சந்தேகத்தை ஏற்படுத்தியதால், வங்கி ஊழியர்கள் பலரும் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், வங்கியின் ஜன்னலை உடைத்த, முகமூடி அணிந்த நபர் ஒருவர், நேராக பெட்டி இருக்கும் இடத்துக்குச் சென்று, அச்சமின்றி பணத்தை எடுத்துச் செல்லும் சிசிடிவி காட்சி அதிர வைத்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்