சென்னையில் தாறுமாறாக ஓடிய ஆட்டோ - சாலை ஓரம் தூங்கிய பெண் பலி

சென்னையில் தாறுமாறாக ஓடிய ஆட்டோ, சாலை ஓரத்தில் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது மோதியதில், பெண் ஒருவர் பலியானார்.
சென்னையில் தாறுமாறாக ஓடிய ஆட்டோ - சாலை ஓரம் தூங்கிய பெண் பலி
x
சென்னை சென்ட்ரலில் இருந்து மூலக்கொத்தளம் நோக்கி  ஆட்டோ ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. தண்டையார் பேட்டையை சேர்ந்த காளியப்பன் என்பவர் ஆட்டோவை ஒட்டிச் சென்றுள்ளார். அப்போது, புளூ ஸ்டார் ஒட்டல் அருகே வரும் போது வால் டாக்ஸ் சாலையின் நடுவே இரண்டு நாய்கள் குறுக்கே ஒடியதாக தெரிகிறது. நாய்கள் மீது மோதாமல் இருக்க காளியப்பன் பிரேக் பிடித்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ, சாலை ஓரத்தில் தூங்கி கொண்டு இருந்தவர்கள் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் அஞ்சலை என்ற பெண் சம்பவ இடத்திலேயே  உயிரிழந்த நிலையில், சிறுமி உள்ளிட்ட மூன்று பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தை ஏற்படுத்திய ஆட்டோ ஒட்டுனர் காளியப்பனை போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்