சுப்பிரமணிய சுவாமி கோவில் தோள்மாலை நிகழ்ச்சி : கோவிலில் குவிந்த பக்தர்கள்

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் தோள்மாலை மாற்றும் நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது
சுப்பிரமணிய சுவாமி கோவில் தோள்மாலை நிகழ்ச்சி : கோவிலில் குவிந்த பக்தர்கள்
x
திருச்செந்தூர்  சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி திருவிழா நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக  திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு கோவில் 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடந்தது.   மாலையில் சுவாமி குமரவிடங்கப்பெருமான் மாப்பிள்ளை கோலத்தில் தனி சப்பரத்தில் எழுந்தருளி , தெய்வானை அம்பாளுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து தெற்குரதவீதி , மேலரதவீதி சந்திப்பில் சுவாமி, அம்பாள் தோள்மாலை மாற்றிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் சுவாமியும் அம்பாளும் ஒன்றாக கோவில் வந்து  சேர்ந்தனர். நள்ளிரவு ஒரு மணிக்கு கிழக்கு கோபுர வாயிலில் அமைந்துள்ள மண்டபத்தில் வைத்து திருக்கல்யாண வைபவம் நடைபெறயுள்ளது.  இந்நிகழ்வை காண்பதற்கு திரளான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்