பண்ருட்டியில் போலி ஆதார், ரேஷன் அட்டை தயாரித்தவர் கைது
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டையில் ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை போலியாக தயாரித்த நபரை போலீசார் பிடித்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டையில் ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை போலியாக தயாரித்த நபரை போலீசார் பிடித்துள்ளனர். கோட்டாட்சியர் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற குற்றப்பிரிவு போலீசார், அல்-மதினா கம்யூட்டர்ஸ் என்ற கடையை சோதித்தனர். அப்போது, பிவிசி கார்டு மூலம் ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டை தயார் செய்து கொடுப்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, கம்யூட்டர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஷேக் பரீத்தை கடலூர் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
Next Story