பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு : திருநாவுக்கரசு, சபரிராஜன் மீதான குண்டாஸ் ரத்து

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான திருநாவுக்கரசு, சபரிராஜன் ஆகியோரை, குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவை ரத்துசெய்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு : திருநாவுக்கரசு, சபரிராஜன் மீதான குண்டாஸ் ரத்து
x
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு, சபரிராஜன் உள்ளிட்டோரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து, கோவை மாவட்ட ஆட்சியர், கடந்த மார்ச் மாதம் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி திருநாவுக்கரசுவின் தாயார் பரிமளா, சபரிராஜனின் தாயார் லதா ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் டீக்காராமன் அடங்கிய அமர்வு,  குண்டர் சட்டத்தில் அடைத்து பிறப்பித்த உத்தரவு தொடர்பான ஆவணங்கள் உறவினர்களுக்கு முறையாக வழங்கப்படவில்லை எனவும், ஆவணங்கள் தெளிவில்லாமல் இருப்பதாகவும் கூறி, இருவரையும் குண்டர் சட்டத்தில் அடைத்து, கோவை மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்துசெய்து தீர்ப்பளித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்