தள்ளுவண்டியில் இழுத்து செல்லப்பட்ட நோயாளி-வாகன வசதி இல்லாததால் உயிர் பறிபோன அவலம்

புதுச்சேரி அருகே வாகன வசதி இல்லாததால் தள்ளுவண்டியில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நோயாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
x
தமிழக-புதுச்சேரி எல்லையான சுத்துக்கேணி கிராமத்தில் இயங்கி வரும் செங்கல் சூளையில் விழுப்புரத்தை சேர்ந்த சுப்பிரமணி பணிபுரிந்து வந்தார். திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து  தள்ளுவண்டியில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே சுப்பிரமணி இறந்துவிட்டதாக கூறினர். இறந்தவரின் சடலத்தை சொந்த ஊருக்கு எடுத்து செல்ல, ஆரம்ப சுகாதாரநிலையத்தில் ஆம்புலன்ஸ் கேட்கப்பட்டது. தமிழக பகுதி என்பதால் ஆம்புலன்ஸ் வழங்க புதுச்சேரி அரசு மறுத்துவிட்டது. இதையடுத்து, காவல்துறையின் உதவியுடன் மாற்று ஏற்பாடு செய்து, சுப்பிரமணி உடலை உறவினர்கள் சொந்த ஊருக்கு எடுத்து சென்றனர். 


Next Story

மேலும் செய்திகள்