தாயகத்தில் மதிமுகவின் உயர்நிலைக் குழு கூட்டம்

ஆழ்துளை கிணறுகளை மூட தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக வலியுறுத்தி உள்ளது.
தாயகத்தில் மதிமுகவின் உயர்நிலைக் குழு கூட்டம்
x
சென்னை எழும்பூரில், மதிமுக தலைமையகத்தில், அக்கட்சியின் உயர்நிலைகுழு கூட்டம் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்  நடைபெற்றது. கூட்டத்தில், ஆழ்துளை கிணறுகளில் விழுந்த குழந்தைகளை மீட்க  புதிய  தொழில் நுட்பங்களை மத்திய, மாநில அரசுகள் உருவாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 7 தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன. மறைந்த முதல்வர் ஜெயலலிதா அளித்த வாக்குறுதிபடி, டாஸ்மாக் கடைகளை படிப்படியாக குறைக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்.பி., உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்