ஆழ்கடலுக்கு சென்று கரை சேராத 78 மீனவர்கள் : மீட்டுத்தர சக மீனவர்கள் கோரிக்கை

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து ஆழ்கடலுக்கு சென்று இதுவரை கரைசேராத 78 மீனவர்களை மீட்க, சக மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆழ்கடலுக்கு சென்று கரை சேராத 78 மீனவர்கள் : மீட்டுத்தர சக மீனவர்கள் கோரிக்கை
x
கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து ஆழ்கடலுக்கு சென்று இதுவரை கரைசேராத 78 மீனவர்களை மீட்க, சக மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசின் புயல் எச்சரிக்கை காரணமாக குமரி மாவட்டத்தில் இருந்து ஆழ்கடலுக்கு சென்ற மீனவர்கள் கேரளா, மகாராஷ்டிரா, கோவா உள்ளிட்ட இடங்களில் கரை சேர்ந்துள்ளனர். இந்நிலையில் வள்ளவிளை மற்றும் மிடாலம் பகுதியில் இருந்து 6 விசைப்படகுகளில் கடலுக்கு சென்ற 78 மீனவர்கள் இதுவரை கரை சேரவில்லை என கூறப்படுகிறது.  இந்நிலையில் ஆழ்கடலில் உள்ள 78 மீனவர்களையும் விரைந்து மீட்டு தர வேண்டும் என, சக மீனவர்கள்  வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்