கோவில்பட்டியில் பிரபல துணிக்கடையில் தீ விபத்து
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள பிரபல துணிக்கடை ஒன்றில், பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள பிரபல துணிக்கடை ஒன்றில், பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர், 3 வாகனங்களில் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் சுமார் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள துணிகள் எரிந்து சேதம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
Next Story