"பள்ளிகளில் இந்து அமைப்புகள்?" - விசாரணைக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

பள்ளிக், கல்லூரிகளில் இந்து மாணவர்களை ஒருங்கிணைக்க செயல்பட்டு வரும் குழு குறித்து விசாரிக்குமாறு கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
x
பள்ளிக், கல்லூரிகளில் இந்து மாணவர்களை ஒருங்கிணைக்க செயல்பட்டு வரும் குழு குறித்து விசாரிக்குமாறு கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளி கல்வித் துறை துணை செயலாளர் வெங்கடேசன் வெளியிட்ட அறிக்கையில், பள்ளி, கல்லூரிகளில் இந்து இளைஞர் முன்னணி, இந்து மாணவர் முன்னணி அமைப்புகள் செயல்பட்டு வருவதாகவும் இந்து மாணவர்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஒவ்வொரு கல்லூரியிலும் 10 மாணவர்களை கொண்ட குழு உள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்து மத தலைவர்களின் வரலாறு, இந்து மத கொள்கைகளை பரப்பி, இந்து  மாணவர்களை ஒருங்கிணைக்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்து மாணவ, மாணவிகள் காதல் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்களா? எனவும் அந்த குழு கண்காணிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. எனவே, இது குறித்து உடனடியாக பள்ளி, கல்லூரிகளில் கண்காணிப்பு செய்து அரசுக்கு அறிக்கை அனுப்புமாறு அவர் உத்தரவிட்டுள்ளார். 

மேலும், விரைவில் நடக்க உள்ள சட்டம் ஒழுங்கு குறித்த கூட்டத்தில் இது பற்றி விவாதிக்கப்பட உள்ளதாகவும், பள்ளி, கல்லூரிகளில் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடப்பதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் பள்ளி கல்வித் துறை துணை செயலாளர் வெங்கடேசன்  உத்தரவிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்