"திருக்குறளை முதன்மை நூலாக அறிவிக்க வேண்டும்" - அமைச்சர் பாண்டியராஜன்

திருக்குறளை இந்தியாவின் முதன்மை நூலாக அறிவிக்க வேண்டும் என்று தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன், மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
x
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின்,  பன்னிரண்டாவது பட்டமளிப்பு விழா, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தலைமையில் நடைபெற்றது. இந்த பட்டமளிப்பு விழாவில் 10 ஆயிரத்து 421 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. இதேபோல , மொரீசியஸ் நாட்டின் முன்னாள் அமைச்சரும் உலக திருக்குறள் மைய நிறுவனருமான ஆறுமுகம் பரசுராமன் உள்ளிட்டோருக்கு டாக்டர் பட்டங்களும் வழங்கப்பட்டன. விழாவில் பேசிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், திருக்குறளை இந்தியாவின் முதன்மை நூலாக, மத்திய அரசு, அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 
 

Next Story

மேலும் செய்திகள்