போலீசார் விடிய விடிய சோதனை - பணப்பட்டுவாடா தடுக்க தீவிர நடவடிக்கை

விக்கிரவாண்டி தொகுதியில் பணபட்டுவாடாவை தடுக்க போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
போலீசார் விடிய விடிய சோதனை - பணப்பட்டுவாடா தடுக்க தீவிர நடவடிக்கை
x
விழுப்புரம் எஸ்.பி ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் விக்கிரவாண்டி, பனையபுரம், முண்டியம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விடுதிகள் மற்றும் திருமண மண்டபங்களில் விடிய விடிய சோதனையில் ஈடுபட்டனர். பரிசுப் பொருட்கள் எடுத்துச் செல்லப்படுகிறதா? என்பதை கண்டறிய போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். 3 துணை ராணுவ படையை சேர்ந்த 300 பேர் மற்றும் 7 தமிழ்நாடு சிறப்பு காவல் படை சேர்ந்த போலீசார் மற்றும் மூன்று கூடுதல் எஸ்.பி, 19 டிஎஸ்பிக்கள் உள்ளிட்ட 2000 போலீசார் தேர்தல் பணியில் ஈடுபடுத்த உள்ளதாக விழுப்புரம் மாவட்ட எஸ்.பி ஜெயகுமார் தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்