கோவை குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக, கோவை குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக, கோவை குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து பாதுகாப்பு கருதி, கோவை குற்றால அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்லவும், அருவியில் குளிக்கவும் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். மேலும், கனமழை தொடர்வதால், மறுஅறிவிப்பு வரும் வரை கோவை குற்றால அருவி தற்காலிகமாக மூடப்படுவதாகவும் வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.
Next Story