நாங்குநேரி தொகுதியில் பணப் பட்டுவாடா புகார்: சிதறிக் கிடந்த ரூ. 2.78 லட்சம் பறிமுதல்

நாங்குநேரி தொகுதியில் பணப் பட்டுவாடாவில் ஈடுபட்டதாக திமுக எம்.எல்.ஏ. ஒருவர் பிடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாங்குநேரி தொகுதியில் பணப் பட்டுவாடா புகார்: சிதறிக் கிடந்த ரூ. 2.78 லட்சம் பறிமுதல்
x
நாங்குநேரி தொகுதியில் உள்ள அம்பலம்  கிராமத்தில் வாக்குக்கு பணம் கொடுப்பதாக வந்த தகவலை அடுத்து, அந்தப் பகுதி இளைஞர்கள்  சென்றுள்ளனர். அப்போது, மோட்டார் சைக்கிளில் இருவர் தப்பியதாகவும், அவர்களை துரத்தும் போது, ஒரு வீட்டில் முடிந்ததாகவும் கூறப்படுகிறது. அந்த வீட்டில் வாக்குக்கு பணப் பட்டுவாடா செய்ததாக  வந்த  தகவலின் பேரில் வந்த போலீசார், வீட்டின் முன்பு சிதறிக் கிடந்த 2 லட்சத்து 78 ரூபாயை பறிமுதல் செய்தனர். இதற்கிடையே, அந்த வீட்டில் தங்கி இருந்த பெரியகுளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் உள்ளிட்டோரை போலீசாரிடம் இளைஞர்கள் ஒப்படைத்தனர். ஆனால், தேர்தல் பணி செய்துவிட்டு, வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த வீடு புகுந்து தாக்கியதாக  எம்.எல்.ஏ. சரவணகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.  இது தொடர்பாக, போலீசார் விசாரித்து வருகின்றனர்.  

Next Story

மேலும் செய்திகள்