நியாய விலை கடை ஊழியர்கள் போராட்டம் : 50 % ரேஷன் கடைகள் அடைப்பு
கடலூர் மாவட்டத்தில் நியாயவிலைக் கடை ஊழியர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் நியாயவிலைக் கடை ஊழியர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த மாவட்டத்தில் உள்ள 50 சதவீத கடைகள் மூடப்பட்டுள்ளன. நுகர்பொருள் வாணிப கழக ஊழியர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும், கார்டு எண்ணிக்கைக்கு ஏற்ப, ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் வழங்க வேண்டும், நியாயவிலை கடைக்கு தனித்துறை அமைப்பது உள்ளிட்ட பல கோரிக்கையை அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Next Story