தமிழகத்தில் விரைவில் 6 மருத்துவக் கல்லூரிகள் ஏற்படுத்தப்படும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி

தமிழகத்தில் விரைவில் 6 மருத்துவக் கல்லூரிகள் ஏற்படுத்தப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளார்.
x
விக்கிரவாண்டி தொகுதி அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச் செல்வனை, ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காணை, மாம்பழப்பட்டு, அத்தியூர் திருக்கை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வாக்கு சேகரித்தார். திருவாமத்தூர் கிராமத்தில் வாக்கு சேகரித்த அவர், திமுக தலைவர் ஸ்டாலின், பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுவதாக புகார் கூறினார். தமிழகத்தில், 6 மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரி ஏற்படுத்தப்படுத்தப்படும் என்றும், இதற்காக மத்திய அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்