இருளில் மூழ்கிய மாமல்லபுரம் - ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற சுற்றுலா பயணிகள்
காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் புராதன சின்னங்களை அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மின் விளக்குகள் எரியூட்டப் படாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்
காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் புராதன சின்னங்களை அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மின் விளக்குகள் எரியூட்டப் படாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். பிரதமர் - சீன அதிபர் சந்திப்பை ஒட்டி கடற்கரை கோயில், அர்ஜுணன் தபசு, வெண்ணை உருண்டை கல், ஐந்துரதம் உள்ளிட்ட பகுதிகள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இரவில் ஒளி வெள்ளத்தில் மிளிர்ந்து வந்தது. இந்நிலையில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் கடந்த 2 நாட்களாக புராதன சின்னங்கள் இருளில் மூழ்கின. இதனால் நேற்றிரவு மாமல்லபுரம் வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். புராதன சின்னங்களை காண வசதியாக, மின்விளக்கு வசதியை ஏற்படுத்தி தர அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
Next Story