பிரபல நகைக்கடையில் தீ விபத்து : பல கோடி ரூபாய் நகைகள், பணம் தப்பியது

சிவகாசியில் பிரபல நகைக்கடையில் ஏற்பட்ட தீவிபத்து உடனடியாக அணைக்கப்பட்டதால், பல கோடி மதிப்பிலான நகைகள் மற்றும் பணம் தப்பியது.
பிரபல நகைக்கடையில் தீ விபத்து : பல கோடி ரூபாய் நகைகள், பணம் தப்பியது
x
சிவகாசியில் பிரபல நகைக்கடையில் ஏற்பட்ட தீவிபத்து உடனடியாக அணைக்கப்பட்டதால், பல கோடி மதிப்பிலான நகைகள் மற்றும் பணம் தப்பியது. சிவகாசி பேருந்து நிலையம் பகுதியில் உள்ள பிரபல நகைக்கடையில், நேற்றிரவு ஊழியர்கள் கடையை பூட்டிவிட்டு சென்ற நிலையில், கடையின் உள்ளே இருந்து புகை வெளியேறியுள்ளது. நகைக்கடை காவலர்கள் அளித்த தகவலின் பேரில், அங்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர். இதனால் லாக்கரில் வைக்கப்பட்டிருந்த பலகோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் பணம் தப்பியது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது தெரியவந்தது.

Next Story

மேலும் செய்திகள்