புதுப்பொலிவு பெற்ற மாமல்லபுரத்தில் குவியும் சுற்றுலா பயணிகள்

சீன அதிபர் மற்றும் பிரதமர் மோடியின் வருகைக்கு பிறகு, புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும் மாமல்லபுரத்தை காண, சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
x
சீன அதிபர் மற்றும் பிரதமர் மோடியின் வருகைக்கு பிறகு, புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும் மாமல்லபுரத்தை காண, சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த ஒரு வார காலமாக, சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதால், மாமல்லபுரம் களைகட்டி உள்ளது. விடுமுறை நாளையொட்டி, மாமல்லபுரத்தில் குவிந்து வரும் சுற்றுலா பயணிகள் ஐந்துரதம்,  அர்ச்சுனன் தபசு, கடற்கரை கோயில் உள்ளிட்ட பகுதிகளை ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர். வழக்கத்தை விட சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருப்பதால், வியாபாரம் பெருகி உள்ளதாக, வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்