ஆன்லைன் காய்கறி விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து காய்கனி வியாபாரிகள் போராட்டம்

ஆன்லைனில் காய்கறி விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை கோயம்பேடு சந்தையில் வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆன்லைன் காய்கறி விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து காய்கனி வியாபாரிகள் போராட்டம்
x
ஆன்லைனில் காய்கறி விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை கோயம்பேடு சந்தையில் வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆன்லைன் நிறுவனங்களின் செயல்பாட்டால், சுகாதாரமின்றி தரமற்ற காய்கறிகள் சந்தைக்கு விற்பனைக்கு வருவதாக குற்றம்சாட்டிய அவர்கள், இதனால் 2 ஆயிரத்து 200 வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வேதனை தெரிவித்தனர். இதையடுத்து, பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என காய்கறி சங்க நிர்வாகி மற்றும் காவல்துறையினர், வியாபாரிகளுக்கு உறுதி அளித்தனர். இதையடுத்து, சுமார் 3 மணி நேரம் நடைபெற்று வியாபாரிகளின் போராட்டம் முடிவுக்கு வந்தது. 

Next Story

மேலும் செய்திகள்