சீன அதிபர் மாமல்லபுரத்திற்கு வருகை - கண்காணிப்பு பணிகள் தீவிரம்

மாமல்லபுரத்திற்கு சீன அதிபர் மற்றும் பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு நகரம் முழுவதுமே பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
சீன அதிபர் மாமல்லபுரத்திற்கு வருகை - கண்காணிப்பு பணிகள் தீவிரம்
x
இந்த நிலையில் சந்தேக நபர்கள் கடல் வழியாக நகருக்குள் ஊடுருவுவதை தடுக்கும் வகையில் கடலோர பாதுகாப்பு படையின் 2 கப்பல் மற்றும் ஒரு நீர்மூழ்கி கப்பல் வரவழைக்கப்பட்டுள்ளது. இந்த 3 கப்பல்களும் கடலில் நங்கூரமிட்டு பாதுகாப்பிற்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இரு நாட்டு தலைவர்களும் வந்து செல்லும் வரையிலும் கடலில் நிற்கும் இந்த கப்பல்கள் அதிநவீன ரேடார் மூலம் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளும் என கடலோர பாதுகாப்பு 
படையினர் தெரிவித்துள்ளனர். 

இதேபோல் சென்னை விமானநிலையம் முதல் மாமல்லபுரம் வரை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்