பிரதமர் மோடி, சீன அதிபர் வருகை எதிரொலி : சுற்றுலா பயணிகளுக்கு தடை

பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகையை முன்னிட்டு, மாமல்லபுரத்தை சுற்றுலா பயணிகள் பார்வையிட இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி, சீன அதிபர் வருகை எதிரொலி : சுற்றுலா பயணிகளுக்கு தடை
x
பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும் வரும் 11-ம் தேதி மாமல்லபுரத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். அப்போது, முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதோடு, மாமல்லபுரத்தில் உள்ள சுற்றுலா தலங்களையும் இருவரும் பார்வையிட உள்ளனர். இதை முன்னிட்டு, மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய தொல்லியத்துறை அறிவித்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, ஐந்துரதம், கடற்கரை கோயில், அர்ஜூனன் தபசு, வெண்ணை உருண்டை பாறை உள்ளிட்ட இடங்கள் மூடப்பட்டுள்ளன. 


Next Story

மேலும் செய்திகள்