வி.ஏ.ஓ. லஞ்சம் பெறுவதாக விவசாயிகள் புகார்
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே விஏஓ ஒருவர் லஞ்சம் வாங்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே, விஏஓ ஒருவர் லஞ்சம் வாங்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோதூர்அக்ரஹாரம் வி.ஏ.ஓ.தான் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் என்பது புகார். பயிர் காப்பீடு செய்வதற்கு சிட்டா அடங்கல், பட்டா உள்ளிட்ட எந்தச் சான்றிதழாக இருந்தாலும், லஞ்சம் இல்லாமல் வாங்க முடியாது என அப்பகுதி மக்கள் வேதனையுடன் கூறுகின்றனர். லஞ்சம் கொடுக்க மறுப்பவர்கள், சான்றிதழ் பெற முடியாத நிலை இருப்பதாகவும் மக்கள் கூறுகின்றனர். அவர் சர்வ சாதாரணமாக லஞ்சம் வாங்குவதை, பொதுமக்கள் வீடியோ எடுத்து பதிவிட்டுள்ளனர்.
Next Story