சீன அதிபருக்கு எதிராக போராட்டம் நடத்த திட்டம்: 8 திபெத்தியர்கள் கைது - நோட்டீஸ் பறிமுதல்

மாமல்லபுரம் வருகை தரும் சீன அதிபருக்கு எதிராக சென்னையில் போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்த திபெத் நாட்டினர் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சீன அதிபருக்கு எதிராக போராட்டம் நடத்த திட்டம்: 8 திபெத்தியர்கள் கைது - நோட்டீஸ் பறிமுதல்
x
சீன அதிபர்  ஜின் பிங் வருகிற 11 ஆம் தேதி தமிழகம் வர உள்ள நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அங்கு 2 நாட்கள் பிரதமர் மோடியை சந்திப்பதுடன், பல்வேறு வர்த்தக ஒப்பந்தங்களிலும் கையெழுத்திய உள்ளார்.  இந்த நிலையில், தமிழகம் வரும் சீன அதிபருக்கு எதிராக திபெத் நாட்டினர் ஆர்ப்பாட்டம் நடத்த கூடும் என்பதால் சென்னையில் தங்கியுள்ள திபெத் நாட்டினர் குறித்த விவரங்களை சேகரித்து வருகின்றனர். சென்னை, கிழக்கு தாம்பரம் பகுதியில் தங்கியுள்ள திபெத் மாணவ, மாணவிகளின் அறைகளை சோதனையிடச் சென்றபோது அங்கு 2 மாணவர்கள் தங்கியுள்ள அறையில் சீன அதிபருக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்ட நோட்டீஸ்களை போலீசார் கைப்பற்றினர். அதனைத் தொடர்ந்து ஒரு பெண், 2 மாணவர்கள் உட்பட 8 திபெத்தியர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு, அவர்களை கைது செய்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்