சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் கோயில்களில் கொள்ளையடித்த சிறுவன் கைது

சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள 17 கோயில்களில் உண்டியலை உடைத்து பணம் திருடிய சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் கோயில்களில் கொள்ளையடித்த சிறுவன் கைது
x
சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள 17 கோயில்களில் உண்டியலை உடைத்து பணம் திருடிய சிறுவனை போலீசார் கைது செய்தனர். கடந்த வாரம் ராயபுரம் அங்காள பரமேஸ்வரி கோவிலில் நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக அங்கு உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது, சிறுவன் ஒருவன் சிக்கினான். இதையடுத்து, அவனை கைது செய்த போலீசார், 3 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் லேப்டாப் ஆகியவற்றை பறிமுதல் செய்து, சிறுவர் சீர்திருத்த காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்