மன்னார்குடி அருகே குட்டையில் பாய்ந்த அரசு பேருந்து - ஓட்டுநர், நடத்துனர் உட்பட 3 பேர் காயம்

மன்னார்குடியிலிருந்து கும்பகோணம் நோக்கி சென்ற அரசு விரைவு பேருந்து ஒன்று மன்னார்குடி அருகே சாலையோர குட்டைக்குள் பாய்ந்தது.
மன்னார்குடி அருகே குட்டையில் பாய்ந்த அரசு பேருந்து - ஓட்டுநர், நடத்துனர் உட்பட 3 பேர் காயம்
x
மன்னார்குடியிலிருந்து கும்பகோணம் நோக்கி சென்ற அரசு விரைவு பேருந்து ஒன்று, மன்னார்குடி அருகே சாலையோர குட்டைக்குள் பாய்ந்தது. இந்த விபத்தில் பேருந்து பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். எனினும், பேருந்தின் முன்பகுதியில் அமர்ந்திருந்த நடத்துநர், ஓட்டுநர் மற்றும் பயணி ஒருவர் என 3 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. அவர்கள், மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து பட்டீஸ்வரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்