"ஆசிரியர்கள் பணி பாதுகாப்பை அரசு உறுதி செய்யும்" - அமைச்சர் செங்கோட்டையன்
ஆசிரியர் தகுதித்தேர்வில் தோல்வியடைந்த அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு 10 நாட்கள் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் தகுதித்தேர்வில் தோல்வியடைந்த அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு 10 நாட்கள் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தேசிய பள்ளி மாணவர்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி சென்னை நந்தனம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் பரிசுகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆசிரியர்களின் பணி பாதுகாப்பினை அரசு உறுதி செய்யும் என்று தெரிவித்தார்.
Next Story