தனியார் வங்கியில் போலி நகைகள் ஏலம் என புகார் - போலீசார் தீவிர விசாரணை

திருப்பத்தூரில் தனியார் வங்கியில், ஏலம் எடுக்கப்பட்ட நகைகள் போலியானவை என காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
x
வெங்கடேசன் என்பவர் தங்க ஆபரண தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார். இவர் தனியார் வங்கி ஒன்றியில் 2.63 லட்சத்திற்கு 10 சவரன் நகைகளை ஏலம் எடுத்துள்ளார். நகைகளை எடுத்து சென்ற பின் சந்தேகம் வரவே வங்கி தலைமை மேலாளரை அணுகி நகைகளை சோதனை செய்ய சொல்லி கேட்டுள்ளார். மேலாளர் மறுக்கவே, வற்புறுத்தி சோதனை செய்துள்ளார். இதில் நகைகளில் செம்பு கம்பியில் தங்க முலாம் பூசப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த வெங்கடேசன் செலுத்திய பணத்தை திருப்பி கேட்டுள்ளார். மேலாளர் சரியாக பதிலளிக்காத நிலையில், வெங்கடேசன் திருப்பத்தூர் காவல் துணை  கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தார். போலீசாரும் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்