நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் தனியார் கல்லூரி முதல்வர் பிரேம்நாத்திடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் தனியார் மருத்துவக் கல்லுரி முதல்வரிடம் விசாரணை நடைபெற்றது.
நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் தனியார் கல்லூரி முதல்வர் பிரேம்நாத்திடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை
x
நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் தனியார் மருத்துவக் கல்லுரி முதல்வரிடம் விசாரணை நடைபெற்றது. தேனியில் உள்ள சிபிசிஐடி போலீசாரிடம் சென்னையை சேர்ந்த தனியார் மருத்துவக் கல்லூரி முதல்வர் பிரேம்நாத் பக்கிரியா ஆஜரானார். அவரிடம் நீட் ஆள்மாறாட்டம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக இவரிடம் விசாரணை நடைபெற்றது. இதுபோல, காலையில் இருந்து அந்த கல்லூரியின் கண்காணிப்பாளர் சுகுமாரன் அண்ணாமலையிடமும் விசாரணை நடைபெற்றது. அவரிடம் நடைபெற்ற விசாரணையும் மாலை 4 மணியுடன் நிறைவடைந்தது. இருவரிடமும் கல்லுரியின் மாணவர் சேர்க்கை, சான்றிதழ் சோதனை உள்ளிட்டவை பற்றிய விபரங்கள் கேட்கப்பட்டன. 

Next Story

மேலும் செய்திகள்