ஹெல்மெட் அணிந்தபடி, மூதாட்டியிடம் தங்க சங்கிலி பறிப்பு
திருப்பூர் காந்திநகர், ரேஞ்சர் கம்பெனி வீதியில் குடியிருப்பவர் சுப்புலட்சுமி. மூதாட்டியான இவர் கடைக்கு சென்றுவிட்டு அவரது வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார்.
திருப்பூர் காந்திநகர், ரேஞ்சர் கம்பெனி வீதியில் குடியிருப்பவர் சுப்புலட்சுமி. மூதாட்டியான இவர் கடைக்கு சென்றுவிட்டு அவரது வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த இரு நபர்கள் சுப்புலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த மூன்றரை சவரன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனர். புகாரின் பேரில், அங்கிருந்த பனியன் நிறுவனத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் இரண்டு இளைஞர்கள் அப்பகுதியை நோட்டமிட்டு தங்கச் சங்கிலியை பறித்து தப்பி செல்வது பதிவாகி இருந்தது. இதையடுத்து வாகன பதிவு எண்ணை வைத்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story