நாங்குநேரி காங். வேட்பாளர் ரூபி மனோகரன்

இடைத்தேர்தல் நடைபெறும் நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக ரூபி மனோகரன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
x
இடைத்தேர்தல் நடைபெறும் நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக ரூபி மனோகரன் அறிவிக்கப்பட்டுள்ளார்.  வருகிற 21 ம் தேதி, வாக்குப்பதிவு நடைபெறும் நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் சீட் வாங்க, ரூபி பில்டர்ஸ் அதிபர் ரூபி மனோகரன், தொழிலதிபர் ஊர்வசி அமிர்தராஜ் இடையே கடும் போட்டி நிலவியது. இந்நிலையில், நாங்குநேரி காங்கிரஸ் வேட்பாளராக ரூபி மனோகரன் போட்டியிடுவார் என அக்கட்சி மேலிடம் அறிவித்துள்ளது.
இதனிடையே, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் செயல் தலைவர் ஹெச்.வசந்தகுமார் ஆகியோரை சந்தித்து ரூபி மனோகரன் வாழ்த்து பெற்றார்.


Next Story

மேலும் செய்திகள்